தாய்மாமன் சீர் : தங்க மோதிரம் திட்டம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு
தாய்மாமன் சீர் : குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி முதல், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று மாண்புமிகு முதலமைச்சரால் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சாத்தியமானதையே அறிவிப்போம்... அறிவித்ததை சத்தியமாய் செய்து காட்டுவோம் என்பதற்கு முன் உதாரணமாக தமிழ்நாட்டு தாய்மார்களின் சகோதரராக நம் முதலமைச்சர் அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதார சேவை மீது மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமான இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டமைக்காக... மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி- குடும்ப நலத்துறை ...